Posts

Showing posts from September, 2018

வெங்கிட்டம்மாள் கைங்கர்யம் (பகுதி - 2)

Image
                                              உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி. ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் எதேனும் ஒன்றின் மூலம் அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிது. 'மாமேகம் சரணம் வ்ரஜ' என்று கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார். நானே அனைத்தும் என்று உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற‌ வழிகாட்டி அவசியம். அவர்தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும் என்கிற உண்மை நிலையை அறிந்த ஸ்ரீமதி வெங்கிட்டம்மாள் திருவரங்கம் பெரியநம்பி திருமாளிகையில் ஆச்சார்ய அபிமானம் பெற்று திருவடி சம்பந்தம் பெற்றுக்கொண்டார். தாம் பிறந்த மதுரை இராமாயணச்சாவடியில் இராமபிரானுக்கும்,ஆயர்குல திலகமாகிய ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கும் பல கைங்கர்யங்களைச் செய்ததோடல்லாமல் பாகவத ததீயாராதனங்களை வ்ருத்தி செய்தார். இந்தத்

வெங்கிட்டம்மாள் கைங்கர்யம் (பகுதி - 1)

Image
         இந்த பிரபஞ்சம் விஞ்ஞானிகளாலும், ஆன்மிக நெறியாளர்களாலும் அளவிட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதில் எது முடிவு என்று நினைக்கிறீர்களோ, அங்கு தான் புதிய ஆரம்பம் இருக்கிறது. திசை, தூரம், காலம் மற்றும்  பொருள் என்பதெல்லாம் இங்கு வெறும் அற்பமான விஷயம். நாம் இருப்பது (Solar system) சூரிய குடும்பத்தில். இது போன்று கோடிக்கணக்கான சூரிய குடும்பங்களால் ஆனது நம் (Milky way)பால் வீதி. இது போன்று எண்ணிலடங்கா பால் மண்டலத்தைக் கொண்டது பெரிய (universal space)அண்டவெளி. ஒளி வேகத்தில் சென்றாலே பால்மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைவதே மிகக்கடினம். இதற்கு நம் சராசரி ( ? ) ஆயுளான 100 ஆண்டுகள் போதவே போதாது. அப்பாலுக்கு அப்பால் அதற்கும் மேல் இருப்பது என்னவென்று விஞ்ஞானிகள் தொலைநோக்கியில் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் பாரத தேசத்து மெஞ்ஞானிகள் திகைத்து அந்த எல்லையற்ற சக்தியை இறைவன் (பகவான்) என்றுகொண்டாடினர். இந்த பிரபஞ்சத்தில் நாம் கற்றது கைம்மண் அளவு தான்.  இந்த உலகம் எந்த பாதிப்பும் இன்றி அதன் பயணத்தை தொடர  எங்கோ ஓர் இயற்கை கட்டளை மறைந்துள்ளது

அழகர்சாமியின் குதிரை

Image
வைகை ஆற்றைக்கடந்து  அழகர் சாமியின் குதிரை மட்டும் ஆலவாய் நகருக்குள் வந்தது. நகருக்குள்  வந்ததோடல்லாமல் அழகர் ஒய்யாரமாய் அமரும் அந்த தங்க குதிரை மேல் வேறொரு பெருமாளுக்கென எழுந்தருள அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்ததோடல்லாமல் நான்கு மாசி வீதியில் வீதியுலா புறப்பாடும் செய்யப்பட்டது. அது எங்கே? எப்போ?எப்படி? எனும் கதைய சொல்றேன் கேளுங்க! மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு இடையர் சமூகத்தினருள் ஆட்டு வியாபாரிகள் நடத்துகிற ஆட்டு மந்தை சார்பாக (ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை) அச்சமூகத்தினரின் தெய்வமான ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கான ஸ்ரீஜயந்தி 8ம் நாள் உத்ஸவத்திற்காக 1955ம் வருடத்தில் அழகர் தங்கக்குதிரை சிவராஜதானியாக கருதப்படும் ஆலவாய் நகருக்குள் வந்தது. செல்வச்செழிப்பில் செருக்கின் உச்சத்தில் மதுரையில் கொடி கட்டிப் பறந்த இராமாயணச்சாவடித் தெரு இடையர்கள் நடத்தும் ஸ்ரீஜயந்தி 15நாட்கள் உத்ஸவமானது அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே  திரும்பி பார்க்க வைத்ததென்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். அவர்களது கதையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள்.

தேசியமும் தெய்வீகமும்

Image
       மதுரை வடக்குமாசி வீதி இராமாயணச்சாவடி தெரு 'தேசியமும் தெய்வீகமும்' கலந்த புகழுடையது. இராமாயணச் சாவடி கோயிலானது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இராமபிரான், கணேசர், தண்டாயுதபாணி ஆகிய கடவுள்களின் வழிபாட்டு சிலைகளும் சாவடிக்கு உள்ளே உள்ளன.  இராமாயணச்சாவடியின் வெளியே ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு தனிக்கோயில் உள்ளது.  (சிவநாராயண தேசிகர் (எ) நாச்சிமுத்து பழனிச்சாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், கற்றங்குடி ரெட்டி சுவாமிகள் மூக்கையா சுவாமிகள் ஆகியோர் உலாவிய பகுதி இதுவாகும்.) இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாவடிக்குள் இராமாயணம்,பாகவதம், என சாதி பேதமின்றி இடையர்,மறவர்,பிள்ளை,ஐயங்கார் என பலரும் படித்து வந்தனர்.  சங்கர மூர்த்திக்கோனார் என்பவர் ஸ்ரீமத் பாகவத அம்மானையினை கி.பி.1817ம் ஆண்டு நடந்த வைகுண்ட ஏகாதசியன்று இராமாயணச்சாவடியில் அரங்கேற்றினார் என்கிறார் பேராசிரியர் தொ.பரம சிவன்.  (ஆதாரம்: ஆய்வு நூல்- அழகர் கோயில்  -பக்கம் 171 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு-முதற்பதிப்பு:1989) இதிகாச, புராண கதாகாலட்சேபம் நடத்தும் இடமாக

ஸ்ரீஉடையவர் திருக்கோயில் (பகுதி - 2)

Image
தாடியுடன் இருக்கும் சாமியார் மதுரை வட்டாரத்தில் புகழ்பெற்ற சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சிஷ்யர்களில்  ஒருவரான மூக்கையா சுவாமிகள் ஆவார். இந்த சூட்டுக்கோல் மாயாண்டி  சுவாமிகள் பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர். சரி! அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. மன்னார்குடி ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மாயாண்டி சுவாமிகள் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காத குறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார். இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை. ரயிலை என்னென்னவோ முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அந்த பரிசோதகர் தன் தவறை உ