Posts

Showing posts from August, 2018

ஸ்ரீஉடையவர் திருக்கோயில் (பகுதி - 1)

Image
வைணவ புரட்சித் துறவி ஸ்ரீஉடையவர்  -இராமானுசர் (கி.பி.1017-1137)  சனாதன (இந்து) சமய தத்துவப் பிரிவுகளில் வேதாந்தத்தின்  விளக்கங்களில் ஒன்றான ஸ்ரீவிசிஷ்டாத்துவைதத்தின் விடிவெள்ளியாக விளங்கினவர். இவரே விசிட்டாத்துவைத தத்துவ இயலை  இந்தியா முமுவதும் பரப்பினார். சுவாமி விவேகானந்தரும் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் "Although Adisankara was great by intellect yet Ramanuja's heart and compassion were as wide as the universe ( இராமாநுசரது கொள்கை அறிவுக்கு விருந்தாயிருப்பதோடு மட்டுமின்றி இதயத்தை தொடக்கூடியதாகவும் உள்ளது) என்று  உடையவரை பாராட்டினார்.   அனைத்து மக்களும் வாழப்பிறந்த உடையவர் ஸ்ரீஇராமாநுசர் மனித குல வரலாற்றில் காணப்படும் ஒரு வியப்பூட்டும் தத்துவ மேதை, சமூக புரட்சியாளர், பூவுலகில் வைகுந்தத்தை காட்டிய புனிதர். மனிதாபிமானம் மிக்க சமூகச் சிந்தனையாளர். தாம் ஒரு வேதாந்தியாக மட்டும் வாழ்ந்திடாமல், சமுதாயநலனில் அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார். ஜீவ ஆத்மாக்கள் எல்லாம் ஒரே இனம் என்றும் ஒரே தேவனான ஸ்ரீமந்நாராயணனின் குழந்தைகளே எல்லா உயிர்களும் என்று உலகிற்கு பறை சாற்றி

சிறு தெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள்(பகுதி - 2)

Image
திருநெல்லேவி மேலப்பாட்டம் ஆயிரங்காவு அய்யன் (ஆரியங்காவு) சாஸ்தா கோயிலோடு தொடர்புடைய ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீநல்லமாடன் கோயில், ஸ்ரீவீரண்ண சாமி கோயில்  ஆகிய மூன்று கோயில்கள் கூட்டத்தினரும் ஒன்று சேர்ந்தே கோயில் நிகழ்வுகளை தொடர்வது வழக்கம். இதில்  நல்லமாடன் கோயிலில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ஸ்ரீகாமாட்சியம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஸ்ரீவரதராஜப்பெருமாளையும்,ஸ்ரீஏகாம்பர நாதரையும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். காஞ்சி ஸ்ரீவரதராசப்பெருமாளின் "ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்" கூறியபடி ஸ்ரீகன்னி காளியானவள் ஸரஸ்வதியால் ப்ரும்மாவின் யாகத்தை சீர்குலைக்க ஏவிவிடப்பட்டவளாக யூகிக்க வேண்டியிருக்கிறது. ப்ரும்மாவின் யாகத்தை நிலைகுலைக்க எண்ணிய ஸரஸ்வதி பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன் ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 கை

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

Image
ஒரு கதை சொல்லட்டுமா? ஆலவாய் நகரினுள் அத்திகிரி வரதன்,திருக்கச்சி ஏகாம்பரநாதன்,சோலைமலை அழகன்  ஆகிய பெருந்தெய்வங்களை சிறு தெய்வங்களாக வழிபட்டு வரும் கதையை சொல்லட்டுமா? பாண்டிமா தேவி அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்த  ஆலவாய் நகரினுள், புட்டுக்கு மண் சுமந்த லீலாவிநோதனான சோம சுந்தரேஸ்வரரின் ராஜாங்க நகரான சிவராஜதானியென்றழைக்கப்படும் மதுரை நகரிலே பிரசித்தி பெற்ற வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடிக்கு அருகேயுள்ள ஒருசிறு தெய்வக்கோயிலுக்குச் செல்வோம். வாருங்கள்! அதற்கு முன்பு முதலில் சிறுதெய்வம் மற்றும் பெருந்தெய்வம் பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வோம்.  சிறுதெய்வம் என்று சொல்லும் பொழுதே பெருந்தெய்வம் என்ற ஒன்றும் இருப்பதாகக் கருத்து அமைவது தவிர்க்க இயலாததாகும். மனித சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு தோன்றி வளர்ந்துள்ளதைப் போலவே, மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வழிபாட்டிலும் பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்ற பாகுபாடு நிலவி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும் தனித